
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்குப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் கிராமத்தின் மையப் பகுதியில் சாலை ஓரம் நின்றது. பல புயல் காலங்களிலும் கம்பீரமாக நின்ற இந்த அரச மரம் இன்று (24.06.2025 - செவ்வாய்க் கிழமை) மாலை திடீரென அடியோடு சாய்ந்துள்ளது.
மரம் சாயும் போது அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பிகளில் விழுந்து சில மின்கம்பங்கள், மின் உபகரணங்களும் உடைந்து சேதமானது. இதனால் அந்தப் பகுதிக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த வழியாக மின்சாரம் செல்லும் 3 மின்மாற்றிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரம் இல்லாமல் கிராமத்தில் சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இரவு நேரம் என்பதால் மின் பணிகள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை (25.06.2025) காலை புதிய மின்கம்பங்கள் நட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.