Skip to main content

முறையற்ற உறவு; தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற கணவர்! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

Lady passed away police arrested her husband and his girl friend

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பா.கிள்ளனூர் ஊரைச் சேர்ந்தவர் பாபு என்கிற ஏழுமலை(29). இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் காலை ஏழுமலை மனைவி, அவரது வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் இறந்த நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். 

 

தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

அவர்களின் விசாரணையில், இறந்த பெண்ணின் கணவர் ஏழுமலைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவரின் மனைவிக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகவல் ஏழுமலையின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி இரவு ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனைவியை ஏழுமலை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதட்டம் அடைந்த ஏழுமலை, தனது அக்காவின் கணவர் ரவி கார்த்திக்கை அழைத்து வந்து இருவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். 

 

பின்னர், ராஜீவ் காந்தி மற்றும் அவரது மனைவி ஆகியோரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை வீட்டுக்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்கு மாட்டிதொங்க விட்டுள்ளனர். அதன் பிறகு மனைவி தற்கொலை செய்து கொண்டதாக  ஏழுமலை நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஏழுமலை, ராஜீவ்காந்தி, ராஜீவ் காந்தியின் மனைவி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரவி கார்த்திகை தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.