Skip to main content

மனைவியுடன் பழகியதால் ஆத்திரம் - நண்பனின் தலையை துண்டித்தவர் சரண்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018


 

Knife


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கோசிமின் (வயது 33). இவர் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் ஜவுளி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி தெய்வலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

 

 

 

கோசிமின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசார் ரத்தம் தோய்ந்த கத்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கோசிமினை என்னவென்று விசாரித்தனர். அப்போது நண்பனின் தலையை துண்டித்ததாக சொல்லியவுடன் மேலும் அதிர்ச்சியடைந்தனர். 
 

கோசிமின் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,
 

நான் சொந்தமாக கார் வைத்துள்ளேன். நான் ஜவுளிக்கடை வைத்திருப்பதால் அடிக்கடி வெளியே போக முடியாது. அதற்காக பகுதிநேர டிரைவராக சுந்தரபாண்டியன் என்பவரை வேலைக்கு நியமித்தேன். கடந்த 4 ஆண்டுகளாக அவர் வேலை பார்த்தார். மேலும் எனது ஜவுளிகடைக்கு தேவையான பொருட்களையும் அவ்வப்போது வாங்கி வந்து தருவார். இதன் மூலம் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழக தொடங்கினோம். வீட்டுக்கு தேவையான பொருள்களையும் வாங்க சொன்னால் வாங்கி வருவார். இதனால் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார்.

 

 

 

இந்த நிலையில் எனது மனைவி தற்போது கரூரில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த போது, அவர் யாருடனோ போனில் பேசி வந்தார். இதனை பார்த்த உறவினர்கள் என் மனைவியை விசாரித்துள்ளனர். அவர் மழுப்பலாக பேசி சமாளித்துள்ளார். பின்னர் உறவினர்கள் எனக்கு இதுகுறித்து தெரியப்படுத்தினர்.

 

 

 

பின்னர் இதுபற்றி விசாரித்த போது சுந்தரபாண்டியன் தான் போனில் பேசியது தெரியவந்தது. அவர்களுக்கிடையே கள்ளதொடர்பு நீண்ட நாட்களாக இருப்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அதிர்ச்சியடைந்தேன். என் மனைவியை கண்டித்தேன். தொடர்ந்து சுந்தரபாண்டியனையும் கண்டித்தேன். ஆனால் சுந்தரபாண்டியன் கேட்கவில்லை. தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, திட்டம் தீட்டி கொலை செய்தேன் என கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்