Skip to main content

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு சி.பி.எம். நூதன போராட்டம்! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Keerappalayam Union Office Formerly CPM

 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பகுதியில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சமூதாய கூடம் கட்டப்பட்டது. இதில், ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த வாடகையில் திருணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த  10 ஆண்டுகளாகச் சமூதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்காமல் சிமெண்ட் மூட்டைகள், கம்பிகள்  அடுக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது.


சமூதாய கூடம் இல்லாமல் ஏழைமக்கள் மிகவும் சிரமம் அடைந்து, அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாடகையை கடன் வாங்கி கொடுத்து அப்பகுதி மக்கள் வீட்டு சடங்குகளைச் செய்து வருகிறார்கள். இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டு போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் கடந்த காலங்களில் எடுக்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவராமன், செம்மலர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மேளதாள முழங்கச் சீர்வரிசை பொருட்களுடன் சம்பந்தம் கலக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சீர்வரிசை பொருட்களுடன் வந்து அலுவலகத்தின் வாயில் தரையில் சீர்வரிசை பொருட்களை வைத்துக்கொண்டு சமூதாய கூடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோசங்களை எழுப்பினார்கள். இதனால் அலுவலக வாயிலில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் ரூ12 லட்சத்திற்கு சமூதாய கூடத்தைச் சீர் செய்வதற்கு திட்டமதிப்பீடு அனுப்பபட்டுளளதாகவும் இதற்கான நிதி அனுமதி கிடைத்தவுடன் சீர் செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகத்தில் மேளம் அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.