Skip to main content

கனியாமூர் மாணவி செல்போன் விவகாரம்; மாணவியின் தாயார் பேட்டி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Kaniyamoor student cell phone issue; Student's mother interviewed

 

கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கை முதலில் மாநில காவல்துறை விசாரித்து வந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவி உபயோகித்த செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

கனியாமூர் பள்ளி மாணவியின் தாயார் செல்வி சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் எனத் தெரிவித்து வழக்கறிஞருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்தார். ஆனால், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு விதித்துள்ளது. அதனால் நீங்கள் அங்கே ஒப்படையுங்கள் எனத் திருப்பி அனுப்பிவிட்டார். 

 

இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் செல்போனை சிபிசிஐடி காவல்துறை ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாணவியின் தாயார், “சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிக்குத்தான் துணை நிற்கின்றனர். ஆனால், கொலையைக் கண்டுபிடிக்க எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் செய்யவே இல்லை. அவர்கள் இதை தற்கொலையாக மாற்றுவதற்கு ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.

 

செல்போனை வைத்து ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்பது சிபிசிஐடியின் முழு நோக்கமாக இருக்கிறது. அதனால் ஐஎம்இஐ நம்பர் கேட்பார்கள். எங்களிடம் இல்லாத நம்பர்களை எல்லாம் கேட்கிறார்கள். அதற்கு விளக்கம் கொடுங்கள் என்றாலும் தரமாட்டார்கள். அதனோடு டிவைஸ் நம்பர் என்று ஏதோ கேட்பார்கள். அதுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இருக்காது. அந்த டிவைஸ் நம்பருக்கு அர்த்தம் சொல்லுங்கள் என அவர்களிடம் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கும் விளக்கம் கொடுக்க மாட்டார்கள். 

 

சம்மன்களை அடிக்கடி கொடுத்து எங்களை மன உளைச்சளுக்கு ஆளாக்குவார்கள். இந்நிலையில், செல்போனை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இன்று ஒப்படைக்க வந்துள்ளோம். விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தான் எனக்கு முழுத்திருப்தியாக இருந்தது. ஆனால், சிபிசிஐடியிடம் தான் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவே அப்படித்தான் உள்ளது. அதனால் முறைப்படி சிபிசிஐடியிடம் ஒப்படைத்துவிடுங்கள் எனக் கூறிவிட்டனர்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.