Skip to main content

திருவிழா ராட்டினம் அமைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

incident in theni temple festival

 

தேனியில் கோவில் திருவிழாவில் ராட்டினத்திற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கௌரிமாரியம்மன் கோவிலின் 10 நாள் திருவிழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவிற்காக ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. அதில் ராட்டினத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் அலுமினிய ஏணியை எடுத்து சென்றுள்ளார். அப்பொழுது பெரிய மின் விளக்கில் இருந்து ஏணியின் மீது மின்சாரம் தாக்கி இளைஞர் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா சமயத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்