Skip to main content

கொருக்குப்பேட்டையில் எரிந்த நிலையில் சடலங்கள்... போலீசார் விசாரணை!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

incident in chennai korukkupettai

 

சென்னை கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரில் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், மூன்று பேர் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். வெங்கடம்மாள் என்பவர் மகள் ரஜிதாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று (05.02.2021) வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கொருக்குப்பேட்டை தீயணைப்பு துறைக்கும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அப்போது வீட்டினுள் தாய் வெங்கடம்மாள், மகள் ரஜிதா ஆகியோர் தீயில் கருகிய நிலையில் மூன்றாவது நபர் ஒருவரும் தீயில் கருகி உயிழந்துள்ளார். மூன்று உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

incident in chennai korukkupettai

 

தந்தையின் மறைவுக்குப் பிறகு, ரஜிதா மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றிவந்த நிலையில், அதே அலுவலகத்தில் பணியாற்றிவந்த பூபாலன் என்பவரைக் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஜிதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பூபாலன் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் மண்ணெண்ணெய் கேன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக தீயில் எரிந்த நபர் ரஜிதாவின் காதலன் பூபாலன் என்றும் கூறப்படுகிறது.

 

இருப்பினும் இந்தச் சம்பவத்தில் போலீசாரின் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை அடுத்தே உண்மைகள் தெரியவரும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்