Skip to main content

கடலில் மிதந்த உயர் ரக போதைப் பொருள்... போலீசிடம் சிக்கிய ஆறு வாலிபர்கள்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

High quality drug floating in the sea ... Six teenagers caught by the police

 

தூத்துக்குடி நகரில் முக்கிய போதை சரக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாருக்கு தகவல் போயிருக்கிறது. அலர்ட்டான எஸ்.பி., நகரின் மத்திய பாக இன்ஸ்பெக்டரான ஜெயப்பிரகாஷ் தலைமையில் தனிப்படையை அமைத்திருக்கிறார். இந்தத் தனிப்படை டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். அது சமயம் சந்தேகப்படும்படியான வகையில் நின்றிருந்த அண்ணா நகரின் அன்சார்அலி, மாரிமுத்து, இம்ரான்கான் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தவர்கள், அவர்களின் பையைச் சோதனையிட்டதில் உயரிய வெளிநாட்டுப் போதைப் பொருளான ஹெராயின் இருப்பது தெரியவந்திருக்கிறது.

 

தொடர்ந்து அவர்கள் இம்ரான்கான் வீட்டைச் சோதனை போட்டதில் 3 பாக்கெட்களில் இருந்த 162 கிராம் ஹெராயினைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி முத்து (42) என்பவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தியிருக்கிறார்கள். அங்கு 19 பாக்கெட்களில் பேக் செய்யப்பட்ட 21 கிலோ ஹெராயின் எனப்படும் வெளிநாட்டின் ஹைகுவாலிட்டி ஹெராயின் சிக்கியிருக்கிறது. அவரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தன்னுடைய தங்கு படகில் மீன் பிடிக்கப்போவது வழக்கம். கடந்த ஓராண்டிற்கு முன்பு லட்சத்தீவு கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது கடலில் பெரிய பார்சல் ஒன்று மிதந்துவந்தது.

 

High quality drug floating in the sea ... Six teenagers caught by the police

 

அதில் சுமார் 27 பாக்கெட்களில் 32 கிலோ வரையிலான இந்த ஹெராயின் இருந்தது. அதனைக் கைப்பற்றி தன்னுடைய நெருக்கமான உறவினரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்து சில்லறையாக விற்பனை செய்துவந்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மார்க்கெட் நிலவரப்படி 25 கோடி மதிப்பிலான ஹெராயினைக் கைப்பற்றிய தனிப்படையினர், அந்தோணிமுத்து மற்றும் அவருக்கு உதவிய பிரேம்சிங், கசாலி, விற்பனை செய்த அன்சார்அலி, மாரிமுத்து இம்ரான்கான் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை மற்றும் மத்திய பாகம் போலீசார் மேற்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

தூத்துக்குடி வரலாற்றில் 25 கோடி வரையிலான ஹெராயின் போதைக் கேட்ச் அப் மிகப்பெரியது என்கிறார்கள் காவல் வட்டாரத்தினர். இந்த ஆப்பரேஷனை நடத்திய தனிப்படையினரைப் பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், “இது பெரிய அளவிலான மதிப்பு கொண்ட போதைச் சரக்கு. மாவட்டத்தில் போதை வழக்கில் சம்பந்தப்பட்ட 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. போதை விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள். தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் முருகன் என்பவரை தேடிவருகிறோம்” என்றார் எஸ்.பி. 25 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதை பறிமுதல் மாவட்டத்தில் பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.