Skip to main content

பண்டிகையில் குறிவைக்கும் திருட்டு கும்பல் உஷார்... உஷார்... உஷார்...

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் டவுனில் ராம்மோகன் என்பவர் பேன், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், பீரோ, கட்டில் கடை நடத்திவருகிறார். இவரது கடையில் விலைஉயர்ந்த டிவி வாங்க வந்ததுபோல் நடித்து இரண்டுபெண்கள் ஒரு ஆண் ஆகிய மூன்று பேர் ஒரு டிவியையே பட்ட பகலில் திருடிக் கொண்டுபோயுள்ளனர். கடை ஊழியர் ஒரு டிவியை காணோம் என்று சொல்ல அந்த மூன்று பேர்கள் மீது சந்தேகம் வந்தது. ஓடிப்போய் பெண்ணாடம் போலிசில் புகார் கொடுத்தார் ராம்மோகன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு எஸ்.ஐ. கோபாலகிருஷ்ணன், கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு மேற்படி மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்கள் மூவரும் அரியலூர் மாவட்டம் தண்டலை கிராமத்தை சேர்ந்த சங்கர், கல்பனா, கற்பகம் ஆகிய மூவரையும் கைது செய்து டிவியையும் கைப்பற்றினார்கள்.

 

robbery

 

இவர்கள் மட்டுமல்ல இதே ஊரைச் சேர்ந்த பலர் இதேபோல் ஷோ ரூம் கடைகள், நகைகடைகள், ஜவுளிகடைகளில் திருடுவது கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களில் கூட்டம் கூட்டமாக சென்று பெண்களின் தாலி செயின்களை பறிப்பது, வங்கி வாசலில் நின்று பணம் எடுத்துவருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் எடுப்பது, பஸ்சில் ஏறி பெண்கள் ஆண்கள் என பலரிடமும் பிக்பாக்கெட் அடிப்பது என இதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக இவர்களில் ஆண்கள் பெண்கள் என பலரும் செய்கிறார்கள். திருடிய பொருளை உடனடியாக ஆள் மாறிமாறி அனுப்பிவிடுவார்கள். திருடியவர்கள் என்று சம்பந்தப்பட்ட ஆளை பிடித்து சோதனைபோட்டாலும் பொருள் இருக்காது. அது மாறிமாறி போய்விடும் பஸ்சிலும் இதேபோல் தான் நடக்கும்.

 

robbery

 

இப்படி திருடிய பொருட்களை இவர்கள் தங்கள் ஊருக்கு கொண்டுபோய் சேமித்து வைத்து விலைக்குறைவாக விற்பார்கள் பலரும் தங்கள் குடும்ப திருமணம் போன்ற காரியங்களுக்கு இவர்களிடம் பொருட்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். இப்படி திருடுவது தவறு என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் திருட்டு தொழிலை கச்சிதமாக செய்து வருகிறார்கள். இவர்கள் மீது தமிழகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. திருடி மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு போவதும், திரும்பி வந்து மீண்டும் அதே தொழிலை செய்வதும் இவர்களுக்கு சர்வசாதாரணமான ஒன்று. இவர்கள் திருடும் மாடலை வைத்தே போலீஸ் கண்டு பிடித்துவிடும் ஊருக்கே சென்று கைது செய்து பொருட்களை கைப்பற்றுவது என்று அடிக்கடி நடக்கும்.

 

இதேபோல் திருச்சி ராம்ஜி நகரில் குடும்பத்தினர்களோடு கும்பாலாக சென்று திருடுபவர்களும் நிறைய உள்ளனர். ஒருமுறை திட்டக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகத்தில் போது மக்கள் கூட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் தாலி சரடு, செயின் அறுக்கப்பட்டது. சுமார் 100 பவுன் இதை திட்டக்குடி போலீசார் சவாலாக விசாரணை செய்து ராம்ஜி ஆட்களிடம் பரிமுதல் செய்து பரிகொடுத்த பெண்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைத்த வரலாறும் உண்டு. இந்த திருட்டுக்கள் அதிக அளவில் நடக்கும் எப்போது தெரியுமா தீபாவளி பொங்கள் போன்ற விசேஷ நாட்களில்தான். கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்சிலும் சரி, கடைகளிலும் சரி திருடிவிட்டு எளிதில் தப்பிவிடமுடியும் என்பதால் விழாக்காலங்களை தேர்வு செய்கிறார்கள்.

 

 

 இந்த திருட்டுகும்பலை திருந்தி வாழவைக்க பல காவல்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தும் முடியவில்லை என்கிறார்கள் காவல்துறையினர். பணத்தை, நகையை, பொருட்களை பரிகொடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள். திருடியவர்களை சாபமிடுவார்கள் போலீஸ் புடிக்குமே சிறைக்கு போகனுமே என்று கவலைப்படாமல் திருடுவது எங்கள் குல தொழில் என்பதுபோல் திருடி வருகிறார்கள். அந்த காலத்தில் வழிப்பறி கும்பல் தீ வட்டி வெளிச்சத்தில் ஊர் புகுந்து திருடும்  கும்பல் என பல இருந்தன. காலங்கள் மாறி நாகரீகம் விஞ்ஞான வளர்ச்சி என வந்தாலும் திருடும் கும்பலும் அதற்கு ஏற்றவாறு தங்கள் திருட்டு வழிமுறைகளையும் மாற்றி கொண்டு திருடுகிறார்கள். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.