Published on 11/11/2018 | Edited on 11/11/2018
![ஹ்](http://image.nakkheeran.in/cdn/farfuture/tdoVsOtURB4HF-7Tkv1iwfeV5vUiCMK96TuCTy3oY1M/1541931216/sites/default/files/inline-images/haga.jpg)
அந்தமான் அருகே வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும், வரும் 15ம் தேதி முற்பகலில் வடதமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 30- 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் கடலோர மாவட்டங்களில் 14ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும், கடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கடுமையாக இருக்கும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.