Skip to main content

பஸ்ட் செட்டில்மென்ட் 150 "சி" தான்..! புலம்பும் மாங்கனி ..

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

அ.தி.மு.க.வில் கூட்டணி என்கிற ரயிலின் எஞ்சின் என்பது அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. மதுரை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கூட்டி வரச் சொல்லி  நாற்காலி நுனியில் அவரை அமர வைத்து காட்டமாக இந்தியில் கர்ஜிக்க தமிழ்நாட்டில் நீங்க தலைமையெல்லாம் இல்லே இங்கும் நாங்க தான் அதைத்தான் அமித்ஷா ஜி இந்தியிலே சொல்றாங்க என வெடவெடத்து அமர்ந்திருந்த ஒ.பி.எஸ்சிடம் மொழிபெயர்த்தார் தமிழிசை. 

 

 first Settlement is 150 "C" ..! Mourning mangani ..

 

கூட்டணி என்கிற ரயில் எஞ்சினை ஓட்டுவது அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா? என நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் அரசியல் சூழலில் அந்த ரயிலில் ஏழு பெட்டி எடுத்துக் கொண்டு பயணத்திற்கு தயாராகி வருகிறது பா.ம.க. 

 

 

இன்னும் சில கட்சிகளை பெட்டியில் ஏற்ற அவர்களுடன் பேசி வருகிறது அ.தி.மு.க. இதற்கிடையே கூட்டணி பெட்டியில் ஏறப்போகும் எல்லோருக்கும் தேவையான செலவு தொகையை கொடுக்க வேண்டியது ரயிலை ஓட்டும் எஞ்சின் டிரைவரான அ.தி.மு.க.தான். எனக்கு இத்தனை பெட்டி வேண்டும் என்பதோடு தேவையான செட்டில்மென்ட் மீதும் குறியாக இருக்கிறது பெட்டியில் ஏற தயாராக இருக்கும் கட்சிகள்.

 

 first Settlement is 150 "C" ..! Mourning mangani ..

 

இந்த நிலையில் "மாங்கனி கதை தெரியுமுங்களா?" என்று கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.ஒருவர் சிலாகித்து பேசினார் "அது என்னங்க மாங்கனி கதை என்றோம்" ஆர்வமுடன்

 

"இன்னேரம் தோண்டி துருவி நீங்க எடுத்திருக்க வேண்டாமா? அதையும் நான் தான் சொல்ல வேண்டுமா" என்றவர் தொடர்ந்தார் " அறுசுவை விருந்து எல்லாம் பிரமாதம்தான் விருந்து " மொய் "எல்லாம் ஓ.கே. தான் ஒப்புத் கொண்டது 500 சுவை ஆனால் செட்டில்மென்ட் 150 தானாம். ஒரு பெட்டிக்கு தலா 20 வீதம் 7க்கு 140 கூடுதல் 10 சேர்த்து 150 தான் செட்டில் ஆயிருக்குது ஏன்'ணு மாங்கனி கேட்டதற்கு இது பஸ்ட் அடுத்து நெக்ஸ்ட். அப்புறம் ஒரு நெக்ஸ்ட்டில் டோட்டல் சுவையும் முடியும் என்று ரயில் எஞ்சின் டிரைவர் கூறியிருக்கிறார். இது தான் மாம் கனி கதை" என்றார் 

ஆக இது மாம்பலத்திற்கு ஒருவகையில் ஏமாற்றம் தானோ..? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.