Skip to main content

பிரசவம் முடிந்து வீடு திரும்பிய குடும்பம்; கோர விபத்தில் குழந்தையுடன் பலி!

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

A family involved in an accident; Three passed away with a baby!

 

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிறந்து மூன்று நாட்களான குழந்தையுடன் கணவன், மனைவி, ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன அடைக்கான். 28 வயதான இவர் டீக்கடை மாஸ்டராக பணிபுரிகிறார். சின்ன அடைக்கானுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் சிவங்கிவலைக்குப்பத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 17ம் தேதி சுமதிக்கு தலைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவர்களது உறவினரின் திருமணம் அடுத்த வாரம் நடக்க இருந்த நிலையில், நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். 

 

ஆட்டோவில் செல்ல முடிவு செய்து சுமதி, பிறந்த குழந்தை, சின்ன அடைக்கான், தாய் காளியம்மாள் ஆகியோர் ஆட்டோவில் சிவங்கிவலைக்குப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் தடம் மாறி இடதுபுறம் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. 

 

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மலைராஜ் உட்பட ஐந்து பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் பிறந்த மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை, தாய் சுமதி, சுமதியின் கணவன் சின்ன அடைக்கான், மலைராஜ் ஆகியோர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.