Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 4வது நாளாக கல்லூரி வாயிலில் போராட்டம்

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 4வது நாளாக கல்லூரி வாயிலில் போராட்டம்


சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவலியுறுத்தியும், அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் நான்காவது நாளாக கல்லூரி வாயிலில் அமர்ந்து  இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு கல்லூரியின் மாணவர் சங்க தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பினர். இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். 

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்