கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அங்கு பல மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டதால் சுற்றியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
![eddapady come... People are suffering](http://image.nakkheeran.in/cdn/farfuture/AC1R8fjAjOFEqDkZCWo_vcsd0Nh4MVoHg-19FG4Gniw/1554658779/sites/default/files/inline-images/b570d5b0-21b4-4eca-8db8-e1af28868b72.jpg)
![eddapady come... People are suffering](http://image.nakkheeran.in/cdn/farfuture/J3rdLY-ve1u9X1GyATKCvMiBMHTgA5MaIabbvUJ_k-k/1554658805/sites/default/files/inline-images/4751468f-7b3d-4992-820d-1bb3dcafcf98.jpg)
எடப்பாடி பழனிச்சாமி கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதாக பிரச்சாரம் பயணத்திட்டம் அறிவித்த நிலையில் அவர் வருவதற்கு முன்னராகவே ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு நாலாபுறமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் அதைத் தொடர்ந்து அவர் வருவதற்கு காலதாமதம் ஆனதால் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
-சிவா