Skip to main content

திருவிழா சமாதானக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த முதியவர் உயிரிழப்பு

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
An elderly man who was speaking at a festival peace meeting was lose their live

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் - கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா எதிர்வரும் 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 19 ந் தேதி பொங்கல், 20 ந் தேதி திங்கட்கிழமை தேரோட்டம், 21 ந் தேதி செவ்வாய்க் கிழமை தீர்த்தம், 22 ந் தேதி புதன் கிழமை தெப்பம் என 10 நாட்களுக்கு மேல் திருவிழா நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் அம்பாள் வீதி உலாவும், அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த திருவிழாவில் வழக்கம்போல ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தி வந்தவர்களிடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. அந்த பிரச்சனை சம்மந்தமாக ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் வியாழக்கிழமை மாலை நடந்தது. இதில், செரியலூர் கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பலர் பங்கேற்றனர்.

அதில், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது, கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்த உ.துரைமாணிக்கம் (வயது 85) கலந்து கொண்டு கடந்த காலங்களில் எப்படி திருவிழாவில் பங்கேற்றோம் என்று கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அப்படியே நாற்காலியில் அமர்ந்து நாற்காலியில் இருந்து சரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கியுள்ளனர். ஆனால் எந்த சலனமும் இல்லாத முதியவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். ஆனால் முதியவர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனால் சமாதானக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சமாதானக் கூட்டம் நடக்கும் போது அதில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முதியவர் துரைமாணிக்கம் உடலை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்