Skip to main content

நாய்கள் கடித்து 25 ஆடுகள் பலி... பிழைக்க வந்த இடத்தில் நடந்த சோகம்...!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் என்பீல்டு மோட்டார் சைக்கிள் வாங்கிய கதை ஒன்று சுவாரஸ்யமாக பரவி வந்தது. ஒரு பட்டதாரி இளைஞன் தன் தந்தையிடம் என்பீல்டு பைக் கேட்க, அப்பாவும் எதுவும் சொல்லாமல் ரூ. 50 ஆயிரத்திற்கு 10 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தார்.

 

goats

 



8 மாதங்கள் வளர்த்த பிறகு என்பீல்டு பைக்கும் வாங்கியாச்சு, அப்பாவின் ரூ 50 ஆயிரம் கடனையும் அடைச்சாச்சு. அதனால ஆடு வளர்ப்பில் போடும் முதல் வீணாகாது. வேலை கிடைக்கவில்லை என்று வெட்டியாக வீட்டில் இருந்து கடனுக்கு பைக் வாங்கி பெற்றோருக்கு தொல்லை கொடுக்காமல் ஆடு வளர்த்தால் கடனாளியாகாமல் நினைத்ததை வாங்கலாம் என்ற பதிவு சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது.

ஆனால் தற்போது வளர்த்த ஆட்டுக்குட்டிகளை நாய்களுக்கு இறையாக்கிவிட்டு ஒரு குடும்பம் ராமநாதபுரத்தில் கடனாளி ஆகியுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் தான் செம்மறி ஆடுகள் வளர்ப்பது அதிகம். அந்தப் பகுதியில் வீடுகள் இருக்கும் வீட்டில் ஒன்று இரண்டு வயதான முதியவர்கள் இருப்பார்கள் மற்றவர்கள் ஆண், பெண் என அனைவரும் ஆடுகள் மேய்க்க மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றிருப்பார்கள். பொங்கல், தீபாவளிக்கு ஊருக்கு போகிறார்களோ இல்லையோ குலதெய்வம் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் தவறாமல் போவார்கள். மற்ற நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்வார்கள் டெல்டா விவசாய காலங்களில் புதுக்கோட்டை மாவட்டம் போன்ற பகுதிகளில் மேய்ப்பார்கள்.

 

dog


 



இப்படித்தான் ராமநாதபுரம் மாவட்டம் உடையார்வலசை கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் கோவிந்தராசு நூறு செம்மறி ஆடுகளை ஊர் ஊராக சென்று மேய்த்து வருகிறார். டெல்டாவில் இன்னும் அறுவடை தொடங்காததால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் கிடை அமைத்து தங்கி இருந்து ஆடுகளை மேய்த்து வருகிறார். 

ஆடுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் ஆடுகளுடன் மேய்சலுக்கு நடக்க முடியாது என்று கிடையில் உள்ள பெரிய கூடையில் அடைத்துவிட்டு செல்வது வழக்கம். இன்று சித்திரவேல் என்ற விவசாயியின் தோட்டத்தில் கிடை அமைத்து அங்கே குட்டிகளை கூடையில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் இருட்டிய நேரத்தில் வந்து பார்த்த போது கிடையை சுற்றி நாய்கள் இருந்துள்ளது.

அவசரமாக கூடையை தூக்கிப் பார்த்தால் 25 ஆட்டுக்குட்டிகள் நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தது. இறந்த குட்டிகளை தூக்கி போகவே நாய்கள் வட்டமடித்தது. இதைப் பார்த்து கோவிந்தராசு உள்ளிட்டவர்கள் கண்ணீர் வடித்தனர். ஒரு வருட உழைப்பு அத்தனையும் ஒருசில மணி நேரத்தில் நாய்களால் பறிபோனதே என்று கதறினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.