Skip to main content

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுகவிடமிருந்து பறித்த திமுக!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதன் படி வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவைத்தாக்கல் செய்ய ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள் என்றும், ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

MK STALIN

 

 

பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களின் விவரங்களை பார்க்கலாம். 

1. மைத்ரேயன் ( அதிமுக ).
2. லட்சுமணன் (அதிமுக).
3. ரத்தினவேல் ( அதிமுக ).
4. டி. ராஜா ( இடதுசாரி ).
5. அர்ஜூனன் ( அதிமுக ).
6. கனிமொழி ( திமுக ).

இதில் நான்கு உறுப்பினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள். முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இடதுசாரி கட்சிகளின் ஒருவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி வழங்குவது வழக்கம். அதன் படி இடதுசாரி கட்சியின் டி.ராஜாவிற்கு வழங்கியிருந்தார். இவருடன் சேர்த்தால் அதிமுகவில் ஐந்து உறுப்பினர்கள் ஆகும். அதே போல் திமுக சார்பில் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு முதன் முறையாக சென்றார் கனிமொழி.

 

AIADMK MPS

 

 

ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக அதிமுகவிடம் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறித்தது திமுக. தற்போதைய நிலையில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் திமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும், அதிமுகவிற்கு மூன்று உறுப்பினர்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மொத்தம் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆகும். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கும். இந்த இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.