Skip to main content

தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதால் இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம் 

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
dewali



விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலையத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் திடீர் ஆய்வின்போது ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் 100 இலவச பட்டாசு பாக்ஸ், பேண்ட் சர்ட் 50 செட் என காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்ததில் இதுவரை கிடைத்துள்ளது. 
 

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ்சிடம் சுமார் 7 மணி நேரமாக விசாரணை செய்தனர். இதனால் விழுப்புரம் மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.


 தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டதால் திருநாவலூர் காவல் நிலையம் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவிட்டார். 
 

 

சார்ந்த செய்திகள்