கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸூன் கொடூரத்தை தடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும். தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்" என தெரிவித்துள்ளார்.
#CoronaVirus-ன் கொடூரம் தடுக்க இந்தியப் பிரதமர் மாண்புமிகு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள #21daysLockdown உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) March 24, 2020
நோய் பரவாமல் தடுக்க மாற்றுவழி இல்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தன்னையும் காத்து நாட்டையும் காப்போம்!