Skip to main content

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று உறுதி!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

hjk

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்டப் பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கே.வி குப்பம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் லோகநாதனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்