Skip to main content

கூட்டுறவுத்துறை: 58 சி.எஸ்.ஆர்.களுக்கு துணை பதிவாளர் பதவி உயர்வு

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Cooperatives: 58 CSRs Promoted to Deputy Registrar!

 

தமிழகத்தில், கூட்டுறவுத் துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் (சி.எஸ்.ஆர்) 58 பேருக்கு ஒரே நேரத்தில் துணை பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வை அடுத்து அவர்கள் உடனடியாக புதிய இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர். 

 

அதன்படி, திருவண்ணாமலையில் பணியாற்றி வந்த அன்பழகன் தர்மபுரி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளராகவும், கோவையில் பணியாற்றி வந்த பரமேஸ்வரன் சேலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சேலத்தில் பணியாற்றி வந்த சின்ன பையன் தர்மபுரி பொது விநியோகத் திட்ட துணை பதிவாளராகவும், கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த மதியழகன் தர்மபுரி கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக இயக்குநராகவும், திருப்பூரில் பணியாற்றி வந்த தமிழரசு கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநராகவும், கோவையில் பணியாற்றி வந்த குண்டன் நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக துணை பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

சேலத்தில் பணியாற்றி வந்த குமார் கிருஷ்ணகிரி பொது விநியோகத்திட்ட துணை பதிவாளராகவும், சேலத்தில் பணியாற்றி வந்த பரமசிவம் ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும், நாமக்கல்லில் பணியாற்றி வந்த நாகராஜன் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க நிர்வாக இயக்குநராகவும், சேலம் தனசேகரன் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க துணை பதிவாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

இவர்கள் உள்பட பதவி உயர்வு பெற்ற 58 பேருக்கும் புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

Next Story

ஓமலூரில் கலப்பட மதுபானம் விற்பனை; 5 பேர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sale of adulterated liquor at Omalur; 5 people arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 62 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய மரணத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்படம் மதுபானம் விற்கப்பட்டது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாதாரண உடையில் காவல்துறையினர் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது கலப்பட மதுபானம் விற்று வந்த 5 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பட மது பாட்டில்கள், செல்போன், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.