Skip to main content

குழப்பத்தில் எடப்பாடி; பதிலடி தந்த மா.சு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

 Confused Edappadi - Answer replied Ma.su

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி அரசு மருத்துவமனையில் அட்மிட்டானவர்களுக்கு உயரிய அவசர சிகிச்சை அளித்தது திமுக அரசின் மருத்துவத்துறை. அட்மிட்டானவர்களை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார். மருத்துவர்களுக்குத் தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று சொல்ல, உடனே, "4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக பதிலடி தந்தார் அமைச்சர் மா.சு. 

இந்த நிலையில்,  Fomepizole  மருந்து இல்லை என்று பேசிய எடப்பாடிக்கு மீண்டும் பதிலடி தரும் வகையில் தந்திருக்கிறார்  அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

இது குறித்து அவர்  பேசியபோது, "  இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி. Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol)  மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.    மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது  புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால்,  அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின்,  எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும் " என்று செம காட்டமாக  பதிலடி தந்துள்ளார் அமைச்சர் மா.சு. அமைச்சரின் பதிலடி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்