Skip to main content

கோவை மாணவி தற்கொலை; பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Coimbatore student Passes away; Petition to Collector seeking action against school administration!

 

கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தான் படிக்கும் சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, அதன் காரணமாக கடந்த 11ஆம் தேதி மாலை தற்கொலை செய்துகொண்டார். இது கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் கோவை மாவட்டக் குழுக்கள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.  

 

Coimbatore student Passes away; Petition to Collector seeking action against school administration!

 

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, " கோவையைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த பள்ளி மாணவி, ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லையால் 11.11.2021 அன்று மாலை 5 - 6 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த மாணவி அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தியால் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

 

அந்த மாணவி பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதை காவல்துறை உடனடியாக விசாரித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதோடு, அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இந்த பாலியல் குற்றத்தை முன்னதாகவே அறிந்திருந்த சின்மயா பள்ளி நிர்வாகத்தின் முதல்வர், துணை முதல்வர் எவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தக் குற்றத்தில் ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பள்ளியில் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணை செய்ய வேண்டும். கோவையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிக்க வேண்டும்.

 

கோவையில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் ICC (Internal complaint committee) முறையாக யுஜிசி வழிகாட்டு அடிப்படையில் அமைத்து அது மாணவர்களுக்கு தெரியும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட  அளவில்  மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் இணைத்து ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்"  எனக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.