Skip to main content

ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட இந்தி அறிவிப்பு பலகை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Hindi notice board removed by railway officials at railway station

 

திருப்பூர் ரயில் நிலையத்தில் ‘தகவல் மையம்’ என தமிழில் எழுதப்பட்டிருந்ததை மறைத்து ‘சகயோக்’ என இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அகற்றப்பட்டது.

 

தமிழகத்திலுள்ள ரயில் நிலையங்களில் பொதுவாக, தகவல் பலகைகளை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டியோ அல்லது எழுதியோ வைத்திருப்பது வழக்கம். அதேபோல், ரயில்களின் அறிவிப்புகளும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்றே இருக்கும்.

 

இந்நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு திருப்பூர் ரயில் நிலையத்தில்  ‘தகவல் மையம்’ என்றிருந்த இடத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே சகயோக் என்று இந்தியில் படிக்கும்படியான வார்த்தையிலான பதாகை ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அது  சேவை மையம் என்று தமிழிலும், இன்ஃபர்மேசன் சென்டர் என்று ஆங்கிலத்திலும் இருந்திருக்க வேண்டும்.

 

எந்த மொழியில் படித்தாலும் இந்தி வார்த்தை வாசிக்கும்படி இருந்த பதாகைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரயில்வே அதிகாரிகளால் இன்று அது அகற்றப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரும்பி போ... திரும்பி போ...'- இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Go back... Go back...'- Youth Congress struggle

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ...' என  கோஷங்களை எழுப்பி வருவதால் அந்த பகுதியில் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மோடி வருகைக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Farmers black flag against Modi visit; Police build up

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே ஈரோடு சென்னிமலை பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் பகுதியில் அழகுமலை பிரிவு என்ற இடத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கருப்புக் கொடிகளை ஏந்தியும், கருப்பு பலூன்களை காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2014 மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதனை நிறைவேற்றவில்லை என எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.