Skip to main content

''திராவிடத்தை வளர்த்ததில் சின்னாளபட்டி பெரும்பங்கு வகிக்கிறது''-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

"Chinnalapatti plays a major role in developing Dravida" - Minister I. Periyaswamy's speech!

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி மற்றும் தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் தண்டபாணி, தேவாங்கர் மகாஜன சபை தலைவர் பெத்தனசாமி, செயலாளர் தொழிலதிபர் ராகவன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் முருகேசன், பள்ளி தாளாளர் ராகவன், செயலாளர் பெத்தனசாமி, ஆசிரியர் காசிராஜன், பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபாகனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பள்ளியில் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிவிட்டு மாணவர்கள் மத்தியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''சின்னாளபட்டி வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி அறிவை வளர்த்ததில் முதல் பங்கு வகிப்பது தேவாங்கர் பள்ளிகளே. நான் சிறுவனாக இருக்கும்போது இப்பள்ளியில் விளையாடுவதற்காக வந்துள்ளேன். இன்று இப்பள்ளி உயர் நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதை நிர்வாகித்த நிர்வாகிகளே. தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.எம்.டி.நாச்சியப்பன் தொடங்கி, டி.எஸ்.வி.வி. தியாகராஜன், ஸ்டார் பொம்மை யாசேகர், இராமநாதன் சன்ஸ் பாபு, தண்டபாணி, ஹேமலதா இன்று ராகவன் வரை அனைவரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே. திராவிடத்தை வளர்த்ததில் சின்னாளபட்டி பெரும்பங்கு வகிக்கிறது. இப்பள்ளி கல்வியில் மட்டும் அல்ல விளையாட்டுத்துறையிலும் சிறந்த முறையில் உள்ளது.

 

"Chinnalapatti plays a major role in developing Dravida" - Minister I. Periyaswamy's speech!

 

இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்று வருகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு கடந்த 30 வருடங்களாக நான் உதவி செய்திருக்கிறேன் என்பதை  மனமகிழ்ச்சியுடன் மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இங்கு பள்ளி படிப்பை முடித்தவுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பெறலாம். தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி உதவித்தொகை வழங்கி மாணவ மாணவிகளின் கல்வி நலனை காத்த முதல்வராக மு.க.ஸ்டாலின்  உள்ளார். அவருக்கு ஒவ்வொரு மாணவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்