Skip to main content

மிளகாய் பொடி தூவி 1 கிலோ தங்க நகை, 64 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை!!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் உள்ள தேசநாராயண தெருவை சேர்ந்த  ஓம்ராம் மற்றும் ரவீந்தர்சிங் ஆகியோர் வேலூரில் தங்க நகை பட்டறை நடத்தி வருகின்றனர்.

 

Chilli Powder Sprinkle 1 kg Gold Jewelry, 64 Thousand Rupees Money Loot !!


இவர்கள் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம் பகுதிக்கு தங்க நகைகளை கொண்டுவந்து, ஆர்டர் தந்த அனைத்து நகை கடைகளுக்கும் விற்பனை செய்துவிட்டு, ஆம்பூரில் இருந்து அகரம் வழியாக ஒடுக்கத்தூர் மற்றும் அணைக்கட்டு பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்ய சில கிலோ தங்க நகை எடுத்து செல்லும் பொழுது, ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர்், இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி இவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ தங்க நகை 64 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

Chilli Powder Sprinkle 1 kg Gold Jewelry, 64 Thousand Rupees Money Loot !!

 

இதுக்குறித்து, ஓம் ராம் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையின் மதிப்பு 45 லட்சம் எனக்கூறுகின்றனர் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்