Skip to main content

'அடித்துக் கொல்ல சொன்னதால் செய்தோம்'- கைதானவர்களின் பரபரப்பு வாக்குமூலம்! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

chennai Owner of a drug rehab center police investigation

 

போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரே சிகிச்சை பெற்று வந்தவரை அடித்துக் கொல்லச் சொன்னதாக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து, தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஏழு பேரை கைது செய்தனர். 

 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மறுவாழ்வு மையத்தின் உரிமையாளரே சிகிச்சை பெற்று வந்த வரை அடித்துக் கொல்ல வீடியோ கால் மூலம் சொன்னதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இது மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனியார் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வந்த கார்த்திகேயன்- லோகேஸ்வரி தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்