Skip to main content

பள்ளியில் மோதல்; மாணவன் உயிரிழப்பு

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
conflict at school; Student lost their live

நாமக்கல்லில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அடுத்துள்ளது வரகூர். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நாவல்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் உடன்படிக்கும் சக மாணவனின் காலணியை ஒளித்து வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளியில் இருந்த சக மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் ஆகாஷ் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மாணவன் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக எருமைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது மாணவனின் வகுப்பறை மற்றும் சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) விஜயன் நேரில் சென்று ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்