Skip to main content

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழா

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Centenary Public Health and Preventive Medicine  Trichy

 

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.

 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 100மீ, 200மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுக்கும் போட்டி, புதையல் எடுக்கும் போட்டி, கூடைபந்து, கையுந்தி பந்து, மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட குழு மற்றும் தனிநபர் விளையாட்டுப் போட்டி விழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிரிக்கெட் போட்டி விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார்.

 

Centenary Public Health and Preventive Medicine  Trichy

 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது நூற்றாண்டை தொட்டு வெற்றிகரமாக பயணித்து கொண்டு வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பொது சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. மேலும், வருகின்ற பத்தாம் தேதி சென்னையில் தொடங்க உள்ள நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு ஜோதி கரூர் மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 1ம் தேதி வந்தடையும். நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்கும் பகுதியில் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் பொது சுகாதார ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.

 

Centenary Public Health and Preventive Medicine  Trichy

 

பின்னர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 என்ற எண் வடிவத்தில் நின்று  மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.