Skip to main content

சிலை கடத்தல் விவகாரம் சர்வதேச அளவில் இருப்பதால் சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

Published on 03/08/2018 | Edited on 03/08/2018


சிலை கடத்தல் விவகாரம் சர்வதேச அளவில் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சர்வதேச அளவில் உள்ள பிரச்சனை. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தான். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் சர்வதேச அளவில் உள்ள பிரச்சனைக்கு சிபிஐ-தான் நாட வேண்டிய சூழலில் அது சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அரசுக்கு ஒரே நோக்கம் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்