Skip to main content

மீன் சந்தையாக மாறிய பேருந்து நிலையம் - விலை உயர்வால் விற்பனை மந்தம்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021
Bus station turned into a fish market - Sales slump due to high prices

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்றுமுதல் (07.06.2021) சில தளர்வுகளுடன் ஊரடங்குத் தொடரும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார். அதன்படி மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் காய்கறி, மீன் மற்றும் இறைச்சி சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிகளவில் கூடுகின்றனர். அதனைத் தொடர்ந்து கரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதைக் கருத்தில்கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் இயங்கும் எனவும், அங்கு மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளித்து நேற்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் காலை 4 மணிமுதல் செயல்பட தொடங்கி எட்டு மணிக்கு நிறைவடைந்தது. இதில் குழுமணி ரோட்டில் இயங்கிவந்த காசி விளாங்கி சந்தையில் செயல்பட்ட 22 மொத்த வியாபார கடைகள் இங்கு போடப்பட்டிருந்தன. இதற்கிடையில் இங்கு சில்லரை விற்பனை இல்லாததால் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காரணமாக கடந்த 15 நாட்களாக செயல்படாமல் இருந்த மீன் சந்தை, தற்போது இன்றுமுதல் செயல்பட தொடங்கியதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் காலை 4 மணிக்குத் தொடங்கிய மீன் சந்தை 8 மணிக்கெல்லாம் முடிவு பெற்றது. 

 

இதுகுறித்து கூறிய மீன் வியாபாரிகள், "தற்போது கடலில் மீன்பிடி தடைக்காலம் ஏற்பட்டுள்ளதால் கடல் மீன் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. இன்று மீன் சந்தையில் ஜிலேபி, சுறா,  கிழங்கா, கட்லா மீன்களும் மற்றும் இராட்டு, நண்டு ஆகியவையும் விற்பனைக்கு வந்தது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து மீன் விற்பனைக்கு வந்தது" என தெரிவித்தனர். மத்திய பேருந்து நிலையத்தில் மீன் சந்தை போடப்பட்டிருப்பதால் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததால், இங்கு முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.