Skip to main content

பாஜக பிரமுகரின் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ

Published on 14/12/2022 | Edited on 14/12/2022

 

bjp member college girl student with teacher phone call audio goes viral

 

நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. "மாதவிடாய் வலியோடு எப்படி வருவது சார்" என அழுதுகொண்டு பேசும் மாணவியை ஆசைக்கு இணங்க  அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை அடுத்துள்ள புத்தூர் பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலர் ராணிதான் கல்லூரியின் செயலராக உள்ளார். கார்த்திகேயனுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராகப் பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்பவர், மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது ஆசைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது என்கிற விதி உள்ள நிலையில், ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

bjp member college girl student with teacher phone call audio goes viral
ஆசிரியர் சதிஷ் - பாஜக பிரமுகர் கார்த்திகேயன்

 

அதன்படி ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பது, அதற்கு அந்தப் பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயப்படுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாகச் சொல்லி அந்தப் பெண் சமாளிக்கவே, அதையும் புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் பாஜக நாகை மாவட்ட தலைவர் தன்னுடைய கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுன்சா தலைமையிலான அதிகாரிகள் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கிய அதிகாரிகள் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்குச் சொந்தமான நர்சிங் கல்லூரி மாணவிக்கு அதே கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.