Skip to main content

கிரேனில் வந்த 500 கிலோ எடை கொண்ட மாலை - அரண்டு போன அமைச்சர் கே.என். நேரு!!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

ரபு

 

அமைச்சர் கேன்.என். நேருவுக்கு அணிவிப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் மெகா சைஸ் மாலை கொண்டுவந்திருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி திமுக தலைமையகமான கலைஞர் அறிவாலயத்தில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கு விழா நடைபெற்று. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கே.என். நேரு, அவருக்கு அணிவிக்க இருந்த மாலையைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 500 கிலோ பூக்களால் இந்த மாலை தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

மாலையை ஆட்களால் தூக்க முடியாத காரணத்தால், கிரேன் உதவியுடன் நேருவின் ஆதரவாளர்கள் தூக்கிவந்து நேருவுக்கு அணிவிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே இந்த மாலையை நான் ஏற்க மாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் அவருக்கு மாலையை ஏற்பாடு செய்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். மாலை கருப்பு சிவப்பு வண்ணத்தில் மிக பிரம்மாண்டமாக இருந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்