Skip to main content

விருதுகள்  அறிவிப்பை  மறந்து போன  எடப்பாடி அரசு ! கொந்தளிக்கும் தமிழறிஞர்கள் ! 

Published on 14/01/2019 | Edited on 14/01/2019
b

 

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்   ஒவ்வொரு வருடமும் தமிழ்  மொழி இலக்கியம் மற்றும் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது !  தமிழர் திருநாளை முன்னிட்டு தை 1 -ந்தேதி இந்த விருதுகளை தமிழக அரசு வழங்கும். இதற்கான அறிவிப்பை ஜனவரி 10-ந்தேதிக்குள் அறிவிப்பார்கள். ஆனால், தை முதல் தேதிக்கு முன்பான போகி பண்டிகையான இன்று வரை இதற்கான அறிவிப்பை செய்யவில்லை. இதனால் அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தமிழறிஞர்கள். 


 " திருவள்ளுவர் பெயரில் சுமார்  42 ஆண்டுகளாக தொடர்ந்து விருது  வழங்கப் பட்டு வருகிறது.  அதே போல, பாரதியார் பெயரில் 1997 முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

 

பாரதிதாசன் விருது 1978-லும், திரு.வி.க . பெயரில்  1979-லிலும் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது 2000-லிலும் காமராசர் விருது  2006-லிலும்,  அறிஞர் அண்ணா விருது 2006-லிலும் அறிவிக்கப்பட்டு அவ்வாண்டிலிருந்து தொடர்ந்து விருதுகள வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால்,   இந்தாண்டு இந்த நிமிடம் வரை அறிவிப்பு வரவில்லை.  இவ்வளவுதான் தமிழ் மொழி மீது இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கும்  அக்கறை . ஆட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் கிளம்புவதால்  விருது அறிவிப்பை மறந்து போனார்களோ ? "  என கொந்தளிக்கிறார்கள் தமிழறிஞர்கள்.

 

சார்ந்த செய்திகள்