Skip to main content

பாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் திணித்த பேத்தி; விசாரணையில் திடுக் தகவல்கள்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

An argument between granddaughter and grandmother over money; Tragedy in Papanasam

 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை எனும் கிராமம் உள்ளது. இக்கிரமத்தின் கரைமேட்டுத் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கணவனை இழந்த செல்வமணிக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். 

 

செல்வமணியின் மூத்த மகள் கீதா சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து மாதாமாதம் தாய்க்கு பணம் அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், கீதாவின் மகள் ஜெயலட்சுமி பாட்டி செல்வமணியைக் காணச் சென்றுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டினுள் சென்றுள்ளார். வீட்டில் பாட்டியைத் தேடிய போது, அவர் வீட்டில் இருந்த பாத்திரத்தில் தலைகீழாகத் திணிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். 

 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற பாபநாசம் காவல்துறையினர் உயிரிழந்த செல்வமணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு ஜெயலட்சுமியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலட்சுமியை தொடர்ந்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

 

மூத்த மகள் கீதா செல்வமணிக்கு அனுப்பும் பணத்தை கீதாவின் மகள் ஜெயலட்சுமி அடிக்கடி வந்து வாங்கிச் செல்வது வழக்கமாம். சம்பவத்தன்று ஜெயலட்சுமி வந்து பணம் கேட்ட பொழுது செல்வமணி தர மறுத்ததால் அவரை ஜெயலட்சுமி தள்ளிவிட்டுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செல்வமணியை வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தில் தலைகீழாகத் திணித்துள்ளார். தொடர்ந்து வீட்டினை உள்பக்கமாக பூட்டிவிட்டு பின் வாசல் வழியாகச் சென்ற ஜெயலட்சுமி மறுநாள் வழக்கமாக வருவது போல் வந்து கதவினைத் தட்டியுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பாட்டியைத் தேடுவது போல் நடித்துள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியை கைது செய்த பாபநாசம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

பணம் தரவில்லை என்பதற்காக பாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் அடைத்த பேத்தியின் செயல் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.