Skip to main content

அதிமுகவிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்காங்க சார்....! –மக்கள் பணியில் ஈரோடு அதிமுக நிர்வாகி 

Published on 02/05/2020 | Edited on 03/05/2020

கரோனா காலம்.. நடுத்தர மற்றும் கூலி வேலைக்கு செல்லும் அடித்தள மக்கள் வாழ்வியலை படுபாதாளத்தில் தள்ளி விட்டது. ஊரடங்கு பொது முடக்கம். ஒட்டப் பந்தைய வீரனின் கால்களை உடைத்து போட்டது போல் என்றென்றும் உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளை முழுமையாக முடக்கி விட்டது.


குறிப்பாக ஈரோடு மாவட்டம் கரும்பு, மஞ்சள், நெல் என விவசாயமும், கைத்தறி, விசைத்தறி என ஜவுளி உற்பத்தியும் செய்யப்படும் பகுதி. ஈரோட்டில் ஜவுளி சந்தையும், மஞ்சள் மார்கெட்டும் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட இந்த தொழில்களில் நேரடியாகவும் மறைக்க மாகவும் பத்து லட்சம் பேர் ஈடுபட்டு அதன் மூலம் வாழ்கிறார்கள். இதில் எட்டு லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள். இத்தொழில்களில் ஈடுபட்டு அன்றாடம் கிடைக்கும் உழைப்பின் ஊதியத்தால் குடும்ப வறுமையை போக்குபவர்கள்.

 

AIADMK In work on Erode


இப்போது அவர்கள் சொல்லவொன்னா துயரத்தில் உள்ளார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் மட்டுமே கிடைத்தது. அ.தி.மு.க.வின் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம் ஆகிய இருவரும் அரசு கொடுத்த சில உதவிகளை தாங்களே நேரடியாக கொடுப்பதுபோல புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு போக இந்த ஈரோட்டில், அந்த அ.தி.மு.க.வில் உள்ள ஒரு நிர்வாகி மட்டும் தன் சொந்த பணத்தை செலவழித்து தினம்தோறும் மக்களுக்கு தேவையானதை கொடுத்து வருகிறார் என்றால் அது விந்தையான செய்திதான் ஆனால் அதுவே உண்மை.

அ.தி.மு.க.வின் ஈரோடு மாநகர செயலாளராக சில காலமும், மாநகராட்சி மண்டல தலைவராகவும், இப்போது பகுதி செயலாளராக இருப்பவர் பெரியார்நகர் மனோகரன் இவர்தான் மக்கள் பணியில் அர்பணிப்போடு ஈடுபட்டு வருகிறார்.

 

AIADMK In work on Erode


கட்சி பணம் கொடுக்கும், அரசு செய்யும் என்று எதையும் எதிர்பாராமல் இந்த 40 நாட்களும் ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல், மாலை என மூன்று வேளையும் சுமார் 10 தன்னார்வலர்களை வைத்து சாலையில் ஆதரவற்று இருக்கும் பொதுமக்கள் முதல் கரோனாவை விரட்ட உறுதுணையாக இருக்கும் காவலர்கள் வரை மூலிகை சூப் கொடுப்பதோடு, மதியம், இரவு என இரண்டு வேலையும் கூலி தொழிலாளர்கள் வீடுகளுக்கே சென்று உணவு வழங்குகிறார். அதே போல் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் என பாரபட்சமின்றி வழங்கி வருகிறார். அதேபோல் ஈரோடு நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் எல்லோருக்கும் பேண்ட், சர்ட், சேலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் என பலவற்றை வழங்கி வருகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருத்தாலும் மக்களுக்கு கொடுக்க மனம் இல்லை ஆனால் பெரிய பதவிகள் எதையும் வகிக்காமல் மக்களுக்கு உதவிகள் இந்த பெரியார்நகர் மனோகரன் போன்ற சிலரால்தான் அடித்தள மக்கள் அ.தி.மு.க.வில் ஒரு வித ஈர்ப்போடு இருக்கிறார்கள் என வெளிப்படையாக கூறுகிறார்கள் ஈரோடு ர.ர.க்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.