Skip to main content

நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

 

AAVIN TANKER AND GOVERNMENT SPEECH FAILURE


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  சுப்பிரமணி, "சென்னையில் ஆவின் நிர்வாகம்- ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர் சங்கம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. ஆவின் நிர்வாகம் தரப்பில் புதிய ஒப்பந்தம் போடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று (14/02/2020) நள்ளிரவு முதல் ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது என்று தெரிவித்தார்." 

 

சார்ந்த செய்திகள்