Skip to main content

சேலத்தில் 60 ஆயிரத்துக்கு 6 லட்சம் ரூபாய் கார்? கவர்ச்சி அறிவிப்பால் மயங்கிய மக்கள்; தந்தை, மகன் சுருட்டிய 100 கோடி ரூபாய்!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

6 lakh car for 60 thousand in Salem? People fascinated by glamorous announcements; 100 crore rupees rolled by father and son!

 

சேலத்தில், போலியாக வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்த தந்தையும், மகனும் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 6 லட்சம் ரூபாய் கார் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, 100 கோடி ரூபாய் வரை சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

சேலம் செவ்வாய்பேட்டை, அழகாபுரம் ஆகிய பகுதிகளில் சில ஆண்டுக்கு முன்பு, ஒரு தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் 60 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 6 லட்சம் ரூபாய் கார், வெறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது. மேலும், சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் தங்கம், வெள்ளி விற்பனை செய்யப்படும் என்றும் டிவி, பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனர்.

 

இந்த அறிவிப்புகளை நம்பி சேலம், நாமக்கல் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அந்நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். பலர் வட்டிக்குக் கடன் பெற்றும் முதலீடு செய்திருந்தனர்.

 

இது போதாதென்று, 60 ஆயிரம் ரூபாய் செலுத்தி 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தவர்களிடம் கார் டெலிவரி கட்டணம், வரி என்ற பெயர்களில் அடிக்கடி அந்நிறுவன ஊழியர்கள் பணம் பறித்துள்ளனர். ஆனால் கடைசி வரை காரையோ, மோட்டார் சைக்கிளையோ முதலீட்டாளர்களின் கண்ணில் கூட காட்டவில்லை. இதுபோல் குறைந்த விலைக்கு தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள் ஆகியவையும் யாருக்கும் வழங்காமல் போக்குக் காட்டி வந்துள்ளனர்.

 

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் நிறுவனத்தை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

 

இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள், இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். முதல்கட்ட விசாரணையில்,  இந்நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிக் கொண்டு மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான நாகராஜன், அவருடைய மகன் வெங்கடேசன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

நாகராஜன், வெங்கடேசன் ஆகியோர் நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. புதிய புகார்களின் அடிப்படையில், மோசடி நபர்கள் இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.