Skip to main content

12 மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

12 fishermen arrested; Sri Lankan Navy atrocity

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து நேற்று காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கடலில் இந்திய எல்லைப் பகுதிகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர்.

 

எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மன்னார் கடற்படைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மன்னார் கடற்படை முகாமில் இம்மீனவர்களை விசாரித்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்ததாக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பிற்பகலுக்கு மேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளார்கள். 

 

கடந்த சில வாரங்களாக இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைச் சிறைபிடிப்பது அடிக்கடி நிகழ்கிறது. சில தினங்கள் முன் 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்