![10th class student pregnant Karaikudi](http://image.nakkheeran.in/cdn/farfuture/3pDY7Y58irS0aLule1yfNjiRDs11GzgzgxedOrbuzHc/1673059713/sites/default/files/inline-images/993-prakash_3.jpg)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவையில் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (20). வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வரும் முத்துக்குமார் பக்கத்துக்கு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளதால், மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்த 10 ஆம் வகுப்பு மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பக்கத்து ஊரில் உள்ள கிணற்றுக்கு அருகே மாணவி மயங்கி கிடப்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து விசாரணையில், முத்துக்குமார் மாணவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தியதாகவும், திடீரென அவர் அந்த மாணவியை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், அதனால்தான் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.