Skip to main content

108 ஆம்புலன்ஸ் விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

108 ambulance accident; One more death

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி, நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமியை வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 10ஆம் தேதி அதிகாலை அழைத்துச் சென்றனர்.

 

அப்போது  ஹரி பெருமானூர் ஏரிக்கரை அருகே ஆம்புலன்ஸ் டயர் வெடித்ததால் நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, அவரது நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் ஏற்கனவே உயிரிழந்தனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, சிகிச்சைக்கு உடன்சென்ற ஆஷா, பணியாளர் மீனா ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.

 

இதில் ஆஷா, பணியாளர் மீனா இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த மீனா நேற்று முன்தினம் (15.06.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 108 ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. மேலும், மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, பணியாளர் மீனா குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்தக் குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்