Skip to main content

இது தான் ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி கொடுத்த உத்திரவாதம் ! 

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
s

 

செந்தில்பாலாஜி திமுக இணைப்பு அ.தி.மு.க., அமமுக ஆகிய கட்சிகள் இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த இணைப்புக்கு செந்தில்பாலாஜியிடம் தி.மு.க. தரப்பில் இன்னமும் எந்த உத்தரவாதமும் தரவில்லையாம். ஆனால் செந்தில்பாலாஜி தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம்,  கரூர் எம்.பி தொகுதியையும், நாமக்கல் எம்.பி தொகுதியையும் ஜெயித்து கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.  

 

தம்பித்துரையும், அமைச்சர் தங்கமணியும்  என்னுடைய ஜென்ம எதிரிகள். அதனால் நான் அவர்களை வீழ்த்தி தி.மு.க. கட்சியை மாபெரும் வெற்றி பெற செய்து சாதித்து காட்டுகிறேன்.  ஜனவரி மாதத்தில் கரூரில் பிரமாண்டமான பொதுகூட்டம் ஒன்றை நடத்தி காட்டுகிறேன் என்கிற உத்திரவாதம் செந்தில்பாலாஜி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்