Skip to main content

''ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடக் காரணமே இவர்தான்'' - அமைச்சர் முத்துசாமி பேச்சு

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

 "It was the Chief Minister who asked EVKS Elangovan to contest" - Minister Muthuswamy's speech

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

 

இந்நிலையில், பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, ''அந்த பையன் சின்ன வயசு. எல்லோரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர். எங்க போனாலும் பிரச்சனை என்றால் நிதானமாகக் கேட்டு அங்கே திண்ணையில் உட்கார்ந்து பிரச்சனை முடியும் வரை வெளியே வருவதில்லை. அப்படி இருந்திருக்கிற ஒரு எம்எல்ஏ திடீரென்று மறைந்துவிட்டார். முதல் நாள் நானும் இளங்கோவனும் பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த நாள் ஈரோடு போக வேண்டும் என்று சொல்கிறார். ஈரோடு வரும்பொழுது மதியம் ஒரு மணிக்கு இப்படி ஆகிவிட்டது என்று திடீரென்று தகவல் வருகிறது. அதன் பிறகு முதல்வரிடம் சொன்னேன். முதல்வர் வந்து பார்த்துவிட்டு பிறகு சென்னை சென்றவுடன் காலையில் என்னை தொடர்பு கொண்டு 'சின்ன வயசிலேயே அந்த பையன் இறந்துவிட்டார். நிறையத் திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார். வருகின்ற பொழுதெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி இறந்து விட்டாரே. அவருடைய நினைவாக நாம் ஏதாவது ஈரோட்டில் செய்ய வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது எங்களுக்கு திடீரென்று நினைவுக்கு  வந்தது, அவர்கள் குடியிருந்த வீதிக்கு பக்கத்து வீதிக்கு பெரியார் பெயர் இருந்தது. இவர்கள் இருந்து வந்த வீதி கச்சேரி வீதி என்று இருந்தது. அதை தெரிவித்த உடன் முதல்வர் அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசி கார்ப்பரேஷனுக்கு சொல்லி உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கச்சேரி வீதி என்பதை எடுத்து விட்டு திருமகன் ஈவேரா வீதி என்று அறிவித்தார்கள்.

 

மிகப்பெரிய சோகம் என்னவென்றால் நான்காம் தேதி அவர் இறக்கிறார். 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கிறார்கள். வெறும் 14 நாள். அந்த குடும்பத்தை நினைத்துப் பாருங்கள். தந்தை, தாயை யோசித்துப் பாருங்கள். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவர் அவர்களின் நிலை எப்படி இருக்கும். அதன் பிறகு தான் முதல்வர் இளங்கோவை நீங்களே நில்லுங்கள் என்று சொன்னார். இளங்கோ சொன்னார், 'அந்த ஊருக்கு வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் 14 நாட்களில் நான் எப்படி தேர்தல் போட்டியிடுவது' என்று வேதனையைத் தெரிவித்தார். அதற்கு பின்னால் அவர் சமாதானப்படுத்தப்பட்டு காங்கிரஸ் கட்சியில் பேசி தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் அவர் போட்டியிட ஒப்புக்கொண்டார். அவர் நேர்மையானவர் எதையும் எதார்த்தமாக பேசக்கூடியவர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.