Skip to main content

திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா... -ஸ்டாலின்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
dmk

 

இன்று காலை சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் ஆளுநர் உரையின்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதைத்தொடர்ந்து மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்பு திமுக தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியது,
 

நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை ராகுல் காந்தி இன்று கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது நானா அல்லது துரைமுருகனா அல்லது டி.ஆர். பாலுவா என்பது வரும் 4ம் தேதி தெரியும். திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகி விட்டோம்.  

இக்கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்