Skip to main content

என்ன ஆனது 'கவாச்' தொழில்நுட்பம்? - வலுக்கும் கோரிக்கைகள்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 What happened to gouache technology; Reinforcement requests

 

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் ரயில் விபத்தை தடுக்கும் 'கவாச்' எனும் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்ற குரல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. ரயில் விபத்துகளை தடுக்கும் கவாச் தொழில்நுட்பம் இந்திய ரயில்வேயில் தற்போது தான் நிறுவப்பட்டு வருகிறது. லோகோ பைலட் ஆபத்துக்குரிய வகையில் ஒரு சிக்னலை மீறி செல்லும்போது இந்த தானியங்கி தொழில்நுட்பமான கவாச் எச்சரிக்கும். எதிர்புறத்தில் ரயில் வந்தாலும் 400 மீட்டர் இடைவெளியில் இரு ரயில்களையும் நிறுத்தி விடும். இது ஒரு தானியங்கி பாதுகாப்பு கருவியாகும். இதை ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்.டி.எஸ்.ஓ உருவாக்கியுள்ளது.

 

nn

 

கடந்த ஆண்டு செகந்திராபாத் ரயில் பாதையில் இதற்கான சோதனையும் செய்யப்பட்டது. கவாச் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இரு ரயில்களில் ஒரு ரயிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் மற்றொரு ரயிலில் வாரிய தலைவர் வி.கே.திருபாதியும் பயணம் செய்து காட்டினர். அப்பொழுது நேர் எதிராக ஒரே டிராக்கில் இயக்கப்பட்ட இரண்டு ரயில்கள் 400 மீட்டருக்கு முன்பாகவே நின்று விட்டது. தற்பொழுது இந்த தொழில்நுட்பத்தை அனைத்து ரயில்வே தடத்திலும் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

இந்தியாவில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே இந்த தொழில்நுட்பம் உள்ளதாகவும், அதுவும் தென்னிந்திய ரயில்களில் அந்த பாதுகாப்பு கருவி இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது விபத்துக்குள்ளான ரயில்களில் கவாச் கருவி இல்லை என்பதையும் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கவாச் தொழில்நுட்பத்தை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.