Skip to main content

2 மச்சினிச்சிகளுடன் குளியல்...பறிபோனது 3 உயிர்.!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 

தெலுங்கானா மாநிலம் ஜனகம்மா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கிட்டேபண்டே என்ற கிராமத்தை சேர்ந்த திவ்யாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், நேற்று (01-06-2019) மாமியார் வீட்டிற்கு வந்தார் அவினாஷ். வந்த இடத்தில் தனது மச்சினிச்சி சங்கீதா, சுமலதா ஆகியோருடன் அருகே உள்ள கால்வாய்க்கு குளிக்க சென்றனர்.

 

ந்ந்

 

அவினாசும் மச்சினிச்சிகளும் கால்வாயில் இறங்கி தண்ணீரை ஒருவர் மீது, ஒருவர் இறைத்து விளையாட, மனைவி திவ்யா அதனை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஆர்வமிகுதியில் மூவரும் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கிவிட்டனர். செய்வதறியாது திகைத்த திவ்யா, ஊருக்குள் சென்று ஆட்களை அழைக்கச் சென்றார்.   ஆனால், கிராமத்தினர் திரண்டு வருவதற்குள் 3 பேரும், கால்வாய் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

ந்


 

சார்ந்த செய்திகள்