Skip to main content

'6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் திருப்தி' - மத்திய அமைச்சர் தோமர் தகவல்!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

cg

 

டெல்லியில் வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளுடன் நடந்த  6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.

 

போராடும் விவசாயிகளுடன் 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகளின் முக்கியமான நான்கு கோரிக்கைகளில், இரண்டில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர், வரும் ஜனவரி 4-ஆம் தேதி விவசாயிகளுடன் ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்