முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
