Skip to main content

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Prime Minister Narendra Modi opens oxygen plants

 

பி.எம்.கேர்ஸ் நிதியின் கீழ் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு உள்பட 35 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (07/10/2021) காலை உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 

 

குறிப்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1.84 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Prime Minister Narendra Modi opens oxygen plants

 

அதேபோல், தேனி, பெரியகுளம் மற்றும் சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டன.

 

அரசு மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவதால், அவசர கால மருத்துவ சேவைக்கு வெளியிலிருந்து ஆக்சிஜன் வாங்க வேண்டியதில்லை. இதனால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உயிர் காப்பாற்றப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

Prime Minister Narendra Modi opens oxygen plants

 

கடந்த காலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதிகம் பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பாலைவனம் முதல் மலைப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிப்ரவரி 14; “இந்தியா என்றும் மறக்காது” - பிரதமர் மோடி 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

pm modi  tweet about Pulwama incident

 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்கமாட்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்வோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை  ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Next Story

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

 

Chief Minister M. K. Stalin will participate in the meeting led by the Prime Minister!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். 

 

அடுத்தாண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் வரும் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 

இதில் கலந்து கொள்வதற்காக வரும் டிசம்பர் 4- ஆம் தேதி அன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் 5- ஆம் தேதி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது, தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழகம் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றன. 

 

ஏற்கனவே, பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.