Skip to main content

பாரத் பையோடெக் நிறுவனத்துக்கு எதிராக மருந்து கட்டுப்பாட்டாளருக்கு பீட்டா அமைப்பு கடிதம்!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

covaxin

 

இந்தியாவில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் தடுப்பூசியைப் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியில் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மத்திய அரசும், பாரத் பையோடெக் நிறுவனமும் தனித்தனியாக விளக்கமளித்தன.

 

வெரோ செல் (vero cell) உற்பத்தியில் மட்டுமே கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாகவும், கோவாக்சின் தடுப்பூசியின் இறுதி வடிவத்தில் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்துவதில்லை என அந்த விளக்கங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பில், கன்றுக்குட்டியின் சீரத்தைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்த, பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு அறிவுறுத்துமாறு பீட்டா அமைப்பு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

இந்தக் கடிதம் குறித்து பீட்டா இந்தியாவின் அறிவியல் கொள்கை ஆலோசகர் டாக்டர் அங்கிதா பாண்டே கூறுகையில், "சீரம் எடுக்கப்படும் கன்றுகள் பிறந்த சிறிது நேரத்திலேயே தங்கள் தாய்மார்களிடமிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன, இது தாய் மற்றும் கன்றுகளுக்கு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தருகிறது" என தெரிவித்துள்ளார். மேலும், “தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசிகளில் விலங்குகளிடமிருந்து எடுக்கப்படும் பொருட்களைத் தவிர்த்து மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை வலியுறுத்தியுள்ளோம்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.

Next Story

"மீண்டும் நிர்வாணமாக நடிக்க வேண்டும்" - ரன்வீர் சிங்கிற்கு பீட்டா நிறுவனம் அழைப்பு

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

peta Company invites Ranveer Singh to act his ad

 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் தற்போது 'சர்க்கஸ்' மற்றும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரன்வீர் சிங். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். இப்படி பலதரப்பிடம் இருந்த எதிர்ப்பு கிளம்ப சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ரன்வீர் சிங்கிடம் பீட்டா அமைப்பு தங்கள் 'ட்ரை வேகன்' பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "பீட்டா இந்திய அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள். சமீபத்தில் உங்கள் ஃபோட்டோஷூட்டை பார்த்தோம். எனவே எங்கள் அமைப்பு, 'அனைத்து விலங்குகளும் ஒரே பாகங்களைக் கொண்டவை' என்ற கோஷத்துடன் நடத்தும் பிரச்சார விளம்பர படத்தில் நிர்வாணமாக நடிக்க பரிசீலிப்பீர்களா" என கேட்டுள்ளனர்.

 

ஏற்கனவே பீட்டா அமைப்பு இதே கோஷத்துடன் நடத்திய பிரச்சார விளம்பரத்தில் அமெரிக்க நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த தகவலையும் அந்த அழைப்பு கடிதத்தில் பீட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ரன்வீர் சிங் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.